பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது | பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ | 'அனிமல்' படத்தில் அப்பா மகன் உறவு | தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம் | விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு : உடன் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சகம் | பட விழாவை புறக்கணிக்கும் ஸ்வயம் சித்தா : இயக்குனர் புகார் | டொவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகர் விருது | காண்ட்ராக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார் : பாபி சிம்ஹா குற்றச்சாட்டு | மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் |
நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த, என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவைப் பற்றிப் பேசும்போது, 1996களிலேயே ஐதராபாத் நகரை ஐ.டி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த்.
அது தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த முன்னாள் நடிகையும், ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா உட்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்தைப் பற்றி தரக் குறைவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'ராமபானம்' என்ற தெலுங்குப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சீனியர் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவிடம் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெகபதிபாபு, “எப்போது பேசினாலும் ரஜினிகாந்த் சிறப்பாகப் பேசுவார். அதைவிட முக்கியம் அவர் எப்போதும் உண்மையே பேசுவார். ரஜினி பேசியது நூற்றுக்கு நூறு சரி,” என்று பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் தெலுங்குத் திரையுலகினர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக பேச முன்வராத நிலையில், ஜெகபதி பாபு பேசியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.