அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த, என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவைப் பற்றிப் பேசும்போது, 1996களிலேயே ஐதராபாத் நகரை ஐ.டி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த்.
அது தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த முன்னாள் நடிகையும், ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா உட்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்தைப் பற்றி தரக் குறைவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'ராமபானம்' என்ற தெலுங்குப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சீனியர் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவிடம் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெகபதிபாபு, “எப்போது பேசினாலும் ரஜினிகாந்த் சிறப்பாகப் பேசுவார். அதைவிட முக்கியம் அவர் எப்போதும் உண்மையே பேசுவார். ரஜினி பேசியது நூற்றுக்கு நூறு சரி,” என்று பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் தெலுங்குத் திரையுலகினர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக பேச முன்வராத நிலையில், ஜெகபதி பாபு பேசியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.