அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 'கஸ்டடி' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்க, இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “என்னுடைய இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. தமிழில் என்னைப் பற்றி கடந்த பதினைந்து வருடங்களாக ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் இயக்குனரான என்னைப் பற்றி இங்கு அவ்வளவாகத் தெரியாது, அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பில்லை. அது எனக்கு சிறப்பானது. எனது முந்தைய படங்களைப் பார்க்காததால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இது ஒரு கடுமையான, ஆக்ஷன், எமோஷனல் படம்.
இப்படத்திற்கு 'சிவா' எனப் பெயர் வைக்கத்தான் திட்டமிட்டிருந்தேன். நாகார்ஜுனா சாரின் அந்த 'சிவா' படம் போல இந்தப் படமும் தீவிரமான ஒரு படமாக இருக்கும். ஆனால், நாகசைதன்யா அதை ஏற்கவில்லை. ''சிவா' படம் ஒரு கிளாசிக் படம். அந்தத் தலைப்பை எந்த ஒரு அழுத்தமான காரணமும் இல்லாமல் வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் நம்மைக் கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார்,” என வெங்கட் பிரபு கூறினார்.