ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 'கஸ்டடி' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்க, இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “என்னுடைய இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. தமிழில் என்னைப் பற்றி கடந்த பதினைந்து வருடங்களாக ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் இயக்குனரான என்னைப் பற்றி இங்கு அவ்வளவாகத் தெரியாது, அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பில்லை. அது எனக்கு சிறப்பானது. எனது முந்தைய படங்களைப் பார்க்காததால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இது ஒரு கடுமையான, ஆக்ஷன், எமோஷனல் படம்.
இப்படத்திற்கு 'சிவா' எனப் பெயர் வைக்கத்தான் திட்டமிட்டிருந்தேன். நாகார்ஜுனா சாரின் அந்த 'சிவா' படம் போல இந்தப் படமும் தீவிரமான ஒரு படமாக இருக்கும். ஆனால், நாகசைதன்யா அதை ஏற்கவில்லை. ''சிவா' படம் ஒரு கிளாசிக் படம். அந்தத் தலைப்பை எந்த ஒரு அழுத்தமான காரணமும் இல்லாமல் வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் நம்மைக் கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார்,” என வெங்கட் பிரபு கூறினார்.