கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு (2024) ஜனவரி 25ல் மறைந்தார். மகளின் நினைவு நாளன்று இளையராஜா தனது 'எக்ஸ்' தளப்பக்கத்தில், ''பவதாரிணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பவதாரிணியின் பிறந்தநாளான இன்று (பிப்.,12), அவரது நினைவிடம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனரும், பவதாரிணியின் சகோதரருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'ஓராண்டு ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி' எனக் குறிப்பிட்டு, சென்ற வருடன் இதேநாளில் பகிர்ந்த பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.