அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு (2024) ஜனவரி 25ல் மறைந்தார். மகளின் நினைவு நாளன்று இளையராஜா தனது 'எக்ஸ்' தளப்பக்கத்தில், ''பவதாரிணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பவதாரிணியின் பிறந்தநாளான இன்று (பிப்.,12), அவரது நினைவிடம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனரும், பவதாரிணியின் சகோதரருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'ஓராண்டு ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி' எனக் குறிப்பிட்டு, சென்ற வருடன் இதேநாளில் பகிர்ந்த பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.