கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு (2024) ஜனவரி 25ல் மறைந்தார். மகளின் நினைவு நாளன்று இளையராஜா தனது 'எக்ஸ்' தளப்பக்கத்தில், ''பவதாரிணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பவதாரிணியின் பிறந்தநாளான இன்று (பிப்.,12), அவரது நினைவிடம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனரும், பவதாரிணியின் சகோதரருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'ஓராண்டு ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி' எனக் குறிப்பிட்டு, சென்ற வருடன் இதேநாளில் பகிர்ந்த பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.