சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவா. 400 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் ஸ்பெஷலே கானா பாடல் தான். இன்றைக்கு இருக்கும் பல கானா பாடகர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார். தற்போதும் குறிப்பிடத்தக்க சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். அதோடு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நான் காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல்களை இப்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது'' என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இளையராஜா அவரது பாடல்கள், இசையை பயன்படுத்துவது தொடர்பாக காப்பிரைட் கேட்பது, அது தொடர்பாக சில சர்ச்சைகள், வழக்குகள் என உள்ள சூழலில் தேவாவின் இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டுகின்றனர்.