தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவா. 400 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் ஸ்பெஷலே கானா பாடல் தான். இன்றைக்கு இருக்கும் பல கானா பாடகர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார். தற்போதும் குறிப்பிடத்தக்க சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். அதோடு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நான் காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல்களை இப்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது'' என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இளையராஜா அவரது பாடல்கள், இசையை பயன்படுத்துவது தொடர்பாக காப்பிரைட் கேட்பது, அது தொடர்பாக சில சர்ச்சைகள், வழக்குகள் என உள்ள சூழலில் தேவாவின் இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டுகின்றனர்.