கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு |
'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது பழமொழி. அது சினிமாவுக்கும் பொருந்தும். 1980களில் வெளியான 'ஆனந்த கும்மி' படத்தின் கதையை பாடலாசிரியர் வைரமுத்து எழுதியிருந்தார், இளையராஜா இசை அமைத்து, இளையராஜா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தனது மனைவி ஜீவா இளையராஜாவை தயாரிப்பாளராக்கி படத்தை உருவாக்கினார்.
ஆனாலும் படம் படுதோல்வி அடைந்தது. காரணம் கதை அப்படி. கிராமத்து பண்ணையார் மகனும், அந்த பண்ணை வீட்டில் வேலை செய்யும் ஏழைத் தாயின் மகளும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள், உரிய பருவம் வந்ததும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு நாயகனின் தந்தையும், நாயகியின் தாயும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காரணம் இருவருக்கும் உள்ள கள்ள உறவு. அந்த உறவுப்படி இருவரும் அண்ணன், தங்கை என்பதால் இந்த எதிர்ப்பு. அதை மீறி காதலிப்பார்கள். இதனால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்த கதையை ரசிகர்கள் ஏற்கவில்லை. பாலகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். பாலச்சந்திரன், அஸ்வினி என்ற புதுமுகங்களுடன் கவுண்டமணி, செந்தில், பேபி ஷாலினி, பசி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படம் இப்போது எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மட்டும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.சைலஜா பாடிய 'ஆனந்தகும்மி', ஜானகி, சைலஜா பாடிய 'ஒரு கிளி உருகுது'. இளையராஜா பாடிய 'திண்டாடுதே இரண்டு கிளியே..'. உள்ளிட்ட பாடல்கள்தான் அவை.