'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தி லாஸ்ட் பேக்கப்'. இது ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம். இதன் மூலக் கதையை பிரபல ஒளிப்பதிவாளரும், அகாடமியின் டீனுமான சி.ஜே.ராஜ்குமார் எழுதியுள்ளார். மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. வருகிற 26ம் தேதி(நாளை) திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பிறகு படம் தொடர்பான விவாதங்களும், கருத்தரங்கும் நடக்கிறது.
இது குறித்து படத்தை இயக்கி உள்ள ஸ்ரீ ரிதன்யா கூறும்போது, "இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. 3030ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் புனைவுகதை. தொழில்நுட்பம் மட்டுமே ஆட்சி செய்யும் எதிர்கால உலகிலும், மனித உணர்வுகள் என்றும் அழியாது என்பதை நெகிழ்ச்சியுடன் பேசுகிறது. மிகுந்த போட்டிக்கு இடையே இந்த படம் கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது" என்றார்.




