கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு |

சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தி லாஸ்ட் பேக்கப்'. இது ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம். இதன் மூலக் கதையை பிரபல ஒளிப்பதிவாளரும், அகாடமியின் டீனுமான சி.ஜே.ராஜ்குமார் எழுதியுள்ளார். மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. வருகிற 26ம் தேதி(நாளை) திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பிறகு படம் தொடர்பான விவாதங்களும், கருத்தரங்கும் நடக்கிறது.
இது குறித்து படத்தை இயக்கி உள்ள ஸ்ரீ ரிதன்யா கூறும்போது, "இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. 3030ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் புனைவுகதை. தொழில்நுட்பம் மட்டுமே ஆட்சி செய்யும் எதிர்கால உலகிலும், மனித உணர்வுகள் என்றும் அழியாது என்பதை நெகிழ்ச்சியுடன் பேசுகிறது. மிகுந்த போட்டிக்கு இடையே இந்த படம் கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது" என்றார்.