பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் |

மிகுந்த எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் குறிப்பாக படத்தின் முக்கிய நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒவ்வொரு முக்கிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அந்த மொழி திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சிக்கு இன்னும் வலு சேர்த்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்படி அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஜெயசூர்யாவை பாராட்டிய நடிகர் கார்த்தி, அவரை நடிகர் குஞ்சாக்கோ போபன் என நினைத்துக்கொண்டு மலையாள திரையுலகினர் அவரை செல்லமாக அழைக்கும் சாக்கோச்சா என்கிற பெயரை சொல்லி அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறினார்.
இதை அருகில் நின்று பார்த்த நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலரும் சற்று குழம்பித்தான் போனார்கள். நடிகர் ஜெயசூர்யாவுக்கு கூட அந்த குழப்பம் ஏற்பட்டதை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் குஞ்சாக்கோ போபன் கலந்து கொள்ளவும் இல்லை. ஜெயசூர்யாவைத்தான் கார்த்தி தவறுதலாக குஞ்சாக்கோ என குறிப்பிட்டதையும் அதை மேடையிலேயே கார்த்தியிடம் சொல்லி திருத்த முடியாமல் ஜெயராம் மற்றும் தொகுப்பாளினி இருவரும் சங்கடப்பட்டதையும் பார்க்க முடிந்தது.




