சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மிகுந்த எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் குறிப்பாக படத்தின் முக்கிய நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒவ்வொரு முக்கிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அந்த மொழி திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சிக்கு இன்னும் வலு சேர்த்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்படி அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஜெயசூர்யாவை பாராட்டிய நடிகர் கார்த்தி, அவரை நடிகர் குஞ்சாக்கோ போபன் என நினைத்துக்கொண்டு மலையாள திரையுலகினர் அவரை செல்லமாக அழைக்கும் சாக்கோச்சா என்கிற பெயரை சொல்லி அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறினார்.
இதை அருகில் நின்று பார்த்த நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலரும் சற்று குழம்பித்தான் போனார்கள். நடிகர் ஜெயசூர்யாவுக்கு கூட அந்த குழப்பம் ஏற்பட்டதை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் குஞ்சாக்கோ போபன் கலந்து கொள்ளவும் இல்லை. ஜெயசூர்யாவைத்தான் கார்த்தி தவறுதலாக குஞ்சாக்கோ என குறிப்பிட்டதையும் அதை மேடையிலேயே கார்த்தியிடம் சொல்லி திருத்த முடியாமல் ஜெயராம் மற்றும் தொகுப்பாளினி இருவரும் சங்கடப்பட்டதையும் பார்க்க முடிந்தது.