நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

வளர்ந்து வந்த இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். 'அக்னிசாக்ஷி' என்ற கன்னட தொடரின் மூலம் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் திருமணம் செய்தார். ஜெயராம் நடித்த பல படங்கள் வெளிவராமல் தேங்கி கிடந்துள்ளது. சீரியல் வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராம் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயதான சம்பத் ஜெயராமின் மரணம் கன்னட சின்னத்திரை, பெரியதிரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமின் மறைவு குறித்து நடிகர் ராஜேஷ் துருவா தனது டுவிட்டரில் “உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.




