டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? |

வளர்ந்து வந்த இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். 'அக்னிசாக்ஷி' என்ற கன்னட தொடரின் மூலம் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் திருமணம் செய்தார். ஜெயராம் நடித்த பல படங்கள் வெளிவராமல் தேங்கி கிடந்துள்ளது. சீரியல் வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராம் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயதான சம்பத் ஜெயராமின் மரணம் கன்னட சின்னத்திரை, பெரியதிரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமின் மறைவு குறித்து நடிகர் ராஜேஷ் துருவா தனது டுவிட்டரில் “உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.




