என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய  பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த காத்திகா இருந்தார்.  ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.  இதனால் கார்த்திகாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியும், பாராட்டும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின்  சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில் பைசன் படக்குழுவின்  சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும்,  கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக  10 லட்சத்திற்கான காசோலையை  இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று  வழங்கினார்.
'பைசன்' படம் அடிமட்டத்திலிருந்து தேசிய அங்கீகாரத்திற்கு உயர்ந்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசன் வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது.
 
           
             
           
             
           
             
           
            