பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழா மாநாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் ராஜா கூறியதாவது: தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசித்து நன்றாக உள்ளது என அவர் சொன்னதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
‛தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர்' என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை பாடகர் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.