விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால் வாழ்க்கையை, சச்சரவுகளை மையமாக வைத்து ‛தோசா கிங்' என்ற படம் உருவாகிறது என அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஓடிவிட்டது. ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என படத்தை தயாரிக்கிற பாலிவுட் நிறுவனமான ஜங்கிலி அறிவித்தது. சில மாதங்கள் கழித்து அண்ணாச்சி கேரக்டரில் மோகன்லால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் விலகிவிட, இன்னமும் தகுந்த நடிகர்கள் கிடைக்காமல் படக்குழு திணறுகிறதாம்.
மோகன்லாலுக்கு பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்கலாம் என்று சிலர் கூறினாலும், இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம். ஜீவஜோதி வாழ்க்கை, அவர் சந்தித்த பிரச்னை, அவரின் வழக்கு பின்ணனியில் இந்த கதை உருவாக இருப்பதால், அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டார்களாம். ஆனாலும், அண்ணாச்சி குடும்பத்தினர் படத்துக்கு எதிராக கோர்ட் போகலாம். அவரை தவறாக காண்பிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதனாலும் படப்பிடிப்பு தாமதமாகிறதாம். ஜெய்பீம் படத்தில் ஒரு தரப்பினரை இயக்குனர் த.செ.ஞானவேல் தவறாக காண்பித்ததாக பிரச்னைகள் உருவான நிலையில், இந்த படத்திலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து பலர் ஒதுங்குவதாக தகவல்.