சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை |

சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால் வாழ்க்கையை, சச்சரவுகளை மையமாக வைத்து ‛தோசா கிங்' என்ற படம் உருவாகிறது என அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஓடிவிட்டது. ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என படத்தை தயாரிக்கிற பாலிவுட் நிறுவனமான ஜங்கிலி அறிவித்தது. சில மாதங்கள் கழித்து அண்ணாச்சி கேரக்டரில் மோகன்லால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் விலகிவிட, இன்னமும் தகுந்த நடிகர்கள் கிடைக்காமல் படக்குழு திணறுகிறதாம்.
மோகன்லாலுக்கு பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்கலாம் என்று சிலர் கூறினாலும், இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம். ஜீவஜோதி வாழ்க்கை, அவர் சந்தித்த பிரச்னை, அவரின் வழக்கு பின்ணனியில் இந்த கதை உருவாக இருப்பதால், அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டார்களாம். ஆனாலும், அண்ணாச்சி குடும்பத்தினர் படத்துக்கு எதிராக கோர்ட் போகலாம். அவரை தவறாக காண்பிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதனாலும் படப்பிடிப்பு தாமதமாகிறதாம். ஜெய்பீம் படத்தில் ஒரு தரப்பினரை இயக்குனர் த.செ.ஞானவேல் தவறாக காண்பித்ததாக பிரச்னைகள் உருவான நிலையில், இந்த படத்திலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து பலர் ஒதுங்குவதாக தகவல்.