சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா 'கிங் ஆப் கிங்ஸ்' என்ற பெயரில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் நடப்பதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி முன் ஏற்பாடுகளுக்காக கோவை சென்ற கார்த்திக்ராஜா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இதனை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் இடம் பெறும், அப்பா இளையராஜாவின் பாடல்களுகளும் இடம் பெறும். 4 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன், அதையே மேடையில் பயன்படுத்த இருக்கிறேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்த இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். எனது பட பாடல்களையும் பாட உள்ளேன் என்றார்.