எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து சில படங்கள், என்னென்ன ? | அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் | மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் | அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல் | அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்' |
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா 'கிங் ஆப் கிங்ஸ்' என்ற பெயரில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் நடப்பதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி முன் ஏற்பாடுகளுக்காக கோவை சென்ற கார்த்திக்ராஜா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இதனை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் இடம் பெறும், அப்பா இளையராஜாவின் பாடல்களுகளும் இடம் பெறும். 4 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன், அதையே மேடையில் பயன்படுத்த இருக்கிறேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்த இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். எனது பட பாடல்களையும் பாட உள்ளேன் என்றார்.