ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

டி.ராஜேந்தர் நடித்து இயக்கிய உயிருள்ளவரை உஷா படம் 43 ஆண்டுகளுக்குபின் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்துக்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் டி.ராஜேந்தர். தமிழகம் முழுக்க நண்பர்கள் உதவியுடன் தானே படத்தை ரீலீஸ் செய்கிறார்.
இந்த படத்துக்காக வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு என கேள்வி எழுந்துள்ளது. காரணம், திருமணத்துக்கு பின் மனைவி உஷா மீதான அன்பை வெளிப்படுத்த, இப்படி தலைப்பு வைத்து எடுத்த படம் இது. தவிர, கமர்ஷியலாகவும் படம் வெற்றி பெற்று அவர் குடும்பம் நல்ல நிலையில் அமர, அப்போது இந்த படம் உதவியது.
இந்த பட பிரமோஷனுக்காக ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். ஆனால், இதுவரை படம் குறித்து சிம்பு எதுவும் பேசவில்லை. அவர் பேசினால் நன்றாக இருக்கும், அவர் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். படத்துக்கும் கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும் என தியேட்டர்காரர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அப்பாவின் ஆர்வம், அம்மா பாசம் காரணமாக கண்டிப்பாக ஏதாவது செய்வார். விரைவில் படம் குறித்து சிம்பு வீடியோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் தமிழகத்தில் முதற்காட்சியை பார்க்க வாய்ப்பில்லையாம்.




