நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிப்பில் உருவான படம் மாநாடு. யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த படம் வெற்றிபெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியினால் கொடுக்க முடியவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து அதற்கு டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையினையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்தே மாநாடு திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீதும் டி.ராஜேந்தர் வழக்குத்தொடர்ந்ததை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‛வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா,' எனக் கூறியுள்ளார். அதோடு இது சம்பந்தப்பட்ட விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




