என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிப்பில் உருவான படம் மாநாடு. யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த படம் வெற்றிபெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியினால் கொடுக்க முடியவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து அதற்கு டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையினையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்தே மாநாடு திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீதும் டி.ராஜேந்தர் வழக்குத்தொடர்ந்ததை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‛வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா,' எனக் கூறியுள்ளார். அதோடு இது சம்பந்தப்பட்ட விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.