சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிப்பில் உருவான படம் மாநாடு. யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த படம் வெற்றிபெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியினால் கொடுக்க முடியவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து அதற்கு டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையினையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்தே மாநாடு திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீதும் டி.ராஜேந்தர் வழக்குத்தொடர்ந்ததை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‛வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா,' எனக் கூறியுள்ளார். அதோடு இது சம்பந்தப்பட்ட விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




