Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்”

01 டிச, 2025 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Manamagal”-that-transformed-dance-legend-Padmini-into-a-leading-lady
Advertisement


திருவிதாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும், ஆரம்ப காலங்களில் வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் நடன மங்கைகளாகவே தங்களது கலைப்பணியை ஆரம்பித்திருந்தனர். “வேதாள உலகம்”, “மோகினி”, “போஜன்”, “பக்த ஜனா”, “ஆதித்தன் கனவு”, “மகாபலி”, “கோகுல தாஸி”, “வாழ்க்கை”, “நாட்டிய ராணி”, “மங்கையர்க்கரசி”, “கன்னியின் காதலி”, “மந்திரிகுமாரி”, “விஜயகுமாரி” என 1950களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் இவர்களது நடனம் இல்லாத திரைப்படங்களே இல்லை எனும் அளவிற்கு இவர்களது நாட்டியம் தமிழ் திரையுலகின் ஓர் அங்கமாகிப் போயிருந்தது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடன மங்கையாகவே கலையுலகில் பயணித்து வந்த மூவரில் ஒருவரான நடிகை பத்மினி, 1951ம் ஆண்டு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “மணமகள்” என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் ஒரு கதையின் நாயகியாக அறிமுகமானார்.

நம் தமிழகத்து நங்கையர்கள் “நல்ல பெண்மணி” என வாழ்வதற்குரிய இலக்கணங்களை எடுத்துரைக்கும் ஈடில்லா திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “மணமகள்”. விபச்சாரத்தை சாகுபடி செய்யும் சண்டாளர்களின் சதி வேலைகளைக் கூட, ஒரே ஒரு பெண் சந்திக்கு இழுத்து சரித்து விடமுடியும் எனும் பெண் வலிமையைக் கூறும் பெருமை நிறைந்த கதை “மணமகள்” என்று இத்திரைப்படத்திற்குச் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது அன்றைய நாளில்.

பாட்டு சொல்லிக் கொடுக்க வந்த பாகவதனிடம் குருபக்தி குமாரிக்கு. அந்த பக்தியைக் காதலாக கனிய வைத்து விடுகின்றான் பாகவதன். காதலன் சந்திரனைப் புறக்கணித்துவிட்டு பாகவதனை மணக்கின்றாள் குமாரி. ஆனால் காதலனையும் மறக்க முடியாமல் தவிக்கின்றாள். பாகவதனின் பகல் வேஷத்தைக் கண்டு வாழ்நாளெல்லாம் மணமகளாகவே இருப்பேன். மனைவியாக மாட்டேன் என்று பாகவதனின் ஸ்பரிசம் படாமல் வாழ்கின்றாள் குமாரி. பணத்துக்காக குமாரி. சுகத்துக்காக விஜயா என வாழ்கின்றான் பாகவதன்.

அதுவரை படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த பத்மினி, கதையின் நாயகியாக, குமாரி என்ற கதாபாத்திரத்திலும், அவரது சகோதரி லலிதா, விஜயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். பாகவதனாக நடிகர் டி எஸ் பலையாவும், பத்மினியின் காதலனாக எஸ் வி சகஸ்ரநாமமும் நடித்திருந்த “மணமகள்” திரைப்படம், 1951ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்று, நடிகை பத்மினியின் தமிழ் திரையுலகப் பயணத்திற்கு ஒரு வலுவான பாதையை அமைத்துத் தந்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்!கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in