'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மலையாள இயக்குனர் பாலச்சந்திர மேனன் எழுதி இயக்கிய படம் 'காரியம் நிசாராம்'. இந்த படத்தில் பிரேம் நசீர், பாலச்சந்திர மேனன், லட்சுமி, பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்ற செஞ்சுரி பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தை விசுவை வைத்து ரீமேக் செய்ய விரும்பியது.
பொதுவாக ரீமேக் படத்தை விரும்பாத விசு வேறு யாராவது இயக்கட்டும் நான் நடித்து தருகிறேன் என்று சொன்னார். அதன்படி டி.எஸ்.பாலகன் என்ற புதுமுகம் படத்தை இயக்க நியமிக்கப்பட்டார். புதுமுகம் இயக்கினாலும் படத்தை உண்மையில் இயக்கியது விசு தான். மலையாளத்தில் வெளிவந்த 'காரியம் நிசாரம்' கொஞ்சம் சீரியசான கதை, அந்த கதையை காமெடி கதையாக மாற்றினார் விசு. கூடவே தனது சகோதரர் கிஷ்முவிற்கென்று தனி போஷனை உருவாக்கி நடிக்க வைத்தார். கிஷ்முவின் காமெடி பேசப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. மாப்பிள்ளை சார் என்ற பெயரில் வெளியானது.
மலையாளத்தில் பிரேம் நசீர் நடித்த கேரக்டரில் விசுவும், பாலச்சந்திரமேனன் நடித்த கேரக்டரில் மோகனும், லட்சுமி நடித்த கேரக்டரில் ஜெயந்தியும், பூர்ணிமா நடித்த கேரக்டரில் ரேகாவும் நடித்தார்கள்.
விசு ஒரு வழக்கிறிஞர் மாமனாருக்கு கொடுத்த வாக்குப்படி தனது வேலையை விட்டு விட்டு மனைவிக்கு சேவகம் செய்கிறார். அவருக்கு 2 மகள்கள். இருவரும் காதலித்து திருமணத்திற்காக வீட்டில் அனுமதி கேட்கும்போது அம்மா அனுமதி மறுக்கிறார். அப்பா விசு எப்படியெல்லாம் டிராமா போட்டு மகள்கள் திருமணத்தை நடத்துகிறார் என்பதுதான் கதை.