மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பூர்வீகம் தெலுங்கு என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா. பள்ளியில் படிக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 'காதல்' படத்தில் பரத் ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் சந்தியா தேர்வு செய்யப்பட்டதால், சந்தியாவின் தோழியாக நடித்தார்.
அதன்பிறகு பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைக்காலம், ரெட்ட வாலு உள்பட பல படங்களில் நடித்தார், கடைசியாக 10 வருடங்களுக்கு முன்பு 'முயல்' என்ற படத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்கதில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் எடை கூடி தலையில் மொட்டை அடித்து காட்சி அளிக்கிறார். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட சரண்யாவின் முக்கிய பணியே கோவில்களுக்கு செல்வதுதான், அந்த வகையில் ஒரு நேர்த்தி கடனுக்காக அவர் மொட்டை போட்டுள்ளார். அன்றைய தினம் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.




