'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பூர்வீகம் தெலுங்கு என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா. பள்ளியில் படிக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 'காதல்' படத்தில் பரத் ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் சந்தியா தேர்வு செய்யப்பட்டதால், சந்தியாவின் தோழியாக நடித்தார்.
அதன்பிறகு பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைக்காலம், ரெட்ட வாலு உள்பட பல படங்களில் நடித்தார், கடைசியாக 10 வருடங்களுக்கு முன்பு 'முயல்' என்ற படத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்கதில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் எடை கூடி தலையில் மொட்டை அடித்து காட்சி அளிக்கிறார். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட சரண்யாவின் முக்கிய பணியே கோவில்களுக்கு செல்வதுதான், அந்த வகையில் ஒரு நேர்த்தி கடனுக்காக அவர் மொட்டை போட்டுள்ளார். அன்றைய தினம் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.