மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா. இவரும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அவரது இசையில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் திருச்சியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். பொன்மாலை பொழுது என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி வருகிற செப்., 24ல் திருச்சி மோரிஸ் சிட்டியில் நடக்க உள்ளது. இதில் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் வெளியான பாடல்களை ரசிகர்களுக்கு இன்னிசை நிகழ்ச்சியாக விருந்து அளிக்க உள்ளனர்.
இதில் கார்த்திக் ராஜா உடன் ஹரிஹரன், உன்னி மேனன், சாதனா சர்கம், சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு பாடுகின்றனர். இடையில் டான்ஸ் மாஸ்டர் கலாவின் நடன நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை குஷ்பு தொகுத்து வழங்க உள்ளார். நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களாக சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவு மும்முரமாய் நடக்கிறது. டிக்கெட்டை புக் செய்யுங்கள், பொன்மாலை பொழுது-ல் இன்னிசையை ரசித்து மகிழுங்கள்.