இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா. இவரும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அவரது இசையில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் திருச்சியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். பொன்மாலை பொழுது என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி வருகிற செப்., 24ல் திருச்சி மோரிஸ் சிட்டியில் நடக்க உள்ளது. இதில் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் வெளியான பாடல்களை ரசிகர்களுக்கு இன்னிசை நிகழ்ச்சியாக விருந்து அளிக்க உள்ளனர்.
இதில் கார்த்திக் ராஜா உடன் ஹரிஹரன், உன்னி மேனன், சாதனா சர்கம், சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு பாடுகின்றனர். இடையில் டான்ஸ் மாஸ்டர் கலாவின் நடன நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை குஷ்பு தொகுத்து வழங்க உள்ளார். நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களாக சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவு மும்முரமாய் நடக்கிறது. டிக்கெட்டை புக் செய்யுங்கள், பொன்மாலை பொழுது-ல் இன்னிசையை ரசித்து மகிழுங்கள்.