கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 57 வயது ஆகியும் இந்திய சினிமாவின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராகவே வலம் வருகிறார். பெரும்பாலும் அவர் ஒரு பிளேபாய் ஆகவே மீடியாக்களால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். அதற்கேற்றபடி தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் டேட்டிங், காதல் கிசுகிசு போன்றவற்றிலும் சிக்கியவர் தான் சல்மான்கான்.. ஆனால் சல்மான்கானை பொறுத்தவரை பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாகவும் அதேசமயம் கண்டிப்பாகவும் இருக்க கூடியவர் என்கிற புது தகவலை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகையான பாலக் திவாரி.
சல்மான்கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வரும் ஏப்-21ல் வெளியாகவுள்ள 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலக் திவாரி. இந்தப்படத்தில் நடிகையாகவும், இதற்கு முன்னதாக சல்மான்கான் நடிப்பில் வெளியான ஆண்டிம் என்கிற படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் இவர். இந்த படங்களின் படப்பிடிப்பின்போது சல்மான்கான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு, குறிப்பாக கதாநாயகிகளுக்கும் சேர்த்து ஒரு உத்தரவு போட்டாராம்.
அதாவது பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களின் கழுத்துக்கு கீழே இறங்கி இறங்கி இருக்க கூடாது என்றும் கழுத்து வரை மூடிய ஆடைகளையே அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினாராம் சல்மான்கான். காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டி இருந்தாலும் கூட காட்சி முடிந்தபின் இந்த விஷயத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் சல்மான் கான்.
இதுபற்றி கூறியுள்ள நடிகை பாலக் திவாரியும் தினசரி படப்பிடிப்புக்கு கிளம்பும்போதெல்லாம் இப்படி கழுத்து வரை மூடிய ஆடை அணிந்து சென்றராம். இதை பார்த்துவிட்டு அவரது அம்மாவே ஏன் இப்படி உடையணிந்து செல்கிறாய் என சந்தேகப்பட்டு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது என கூறியுள்ள பாலக் திவாரி, பெண்களின் பாதுகாப்புக்காகவே சல்மான்கான் இப்படி நடந்து கொண்டார் என்றும் அவர்களது உரிமைகளை பறிக்கும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறியுள்ளார்.




