20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கடந்த 2020ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது.. போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் செய்த விசாரணையில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரியா.
சில மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் ரியா. ஆனால் முன்னைப்போல் படங்களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ ரியா நடிக்கவே இல்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கேமரா முன் வந்து நின்றுள்ளார் ரியா. இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருடங்களாக எந்த படப்பிடிப்பிலும் நான் கலந்துகொள்ள வில்லை. கடந்த சில வருடங்களாக மேக்கப், சிகை அலங்காரம் என எதுவும் நடக்காததால் இந்த கேரவன் ஒப்பனை அறை கூட எனக்கு புதிது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்று கூறியுள்ளார்.