ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

கடந்த 2020ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது.. போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் செய்த விசாரணையில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரியா.
சில மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் ரியா. ஆனால் முன்னைப்போல் படங்களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ ரியா நடிக்கவே இல்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கேமரா முன் வந்து நின்றுள்ளார் ரியா. இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருடங்களாக எந்த படப்பிடிப்பிலும் நான் கலந்துகொள்ள வில்லை. கடந்த சில வருடங்களாக மேக்கப், சிகை அலங்காரம் என எதுவும் நடக்காததால் இந்த கேரவன் ஒப்பனை அறை கூட எனக்கு புதிது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்று கூறியுள்ளார். 





 
           
             
           
             
           
             
           
            