மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? |
கடந்த 2020ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது.. போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் செய்த விசாரணையில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரியா.
சில மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் ரியா. ஆனால் முன்னைப்போல் படங்களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ ரியா நடிக்கவே இல்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கேமரா முன் வந்து நின்றுள்ளார் ரியா. இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருடங்களாக எந்த படப்பிடிப்பிலும் நான் கலந்துகொள்ள வில்லை. கடந்த சில வருடங்களாக மேக்கப், சிகை அலங்காரம் என எதுவும் நடக்காததால் இந்த கேரவன் ஒப்பனை அறை கூட எனக்கு புதிது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்று கூறியுள்ளார்.