தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாகவும், அதற்கு நிதி உதவியாளர்களை அழைத்தும், நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சல்மான்கான் கவனத்துக்கு கொண்டு சென்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர், “எனது பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மெயிலும் அனுப்பி மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.