சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாகவும், அதற்கு நிதி உதவியாளர்களை அழைத்தும், நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சல்மான்கான் கவனத்துக்கு கொண்டு சென்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர், “எனது பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மெயிலும் அனுப்பி மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.