எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றுக்கு காரில் சென்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அப்போது காரை விட்டு இறங்கி ஒரு வாலிபரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்றார். மறுநாள் அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கு லிப்ட் கொடுத்த இளைஞருக்கு நன்றி தெரிவித்தார். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவர் எப்படி சட்டவிதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாம் என்று விமர்சனம் எழுந்தது, உடனடியாக அமிதாப் அந்த படம் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது. சும்மா ஜாலிக்காக அதனை வெளியிட்டேன், என்று மறுத்தார்.
இதேபோன்ற சர்ச்சையில் அனுஷ்கா ஷர்மாவும் சிக்கினார். போக்குவரத்து நெரிசலில் ஒரு இளைஞரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது., இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சன், அனுஷ்கா சர்மா ஆகியோரை அழைத்து சென்ற வாகன ஓட்டிகள் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக மும்பை போக்குவரத்து போலீஸ் துறை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. நடிகர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதியா? என்ற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.