பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான்கானின் சகோதரிகளில் ஒருவர் அர்பிதா கான். சமீபத்தில் இவரது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார். தனது வீட்டிற்கு அவ்வப்போது உதவி செய்து வந்த பணியாளர் சந்தீப் ஹெக்டே என்பவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தீப் ஹெக்டே அந்த வைரத்தோடுகளை திருடியது உறுதியானது. அதுமட்டுமல்ல அவர் நகைகளை திருடியவுடன் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லாமல் வேலைக்கு வராமல் ஓடிவிட்டதும் போலீசின் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு சல்மான்கானின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மாதம் இதேபோல பிரபல ஹிந்தி பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டிலும் அங்கே பணிபுரிந்த கார் டிரைவர் இதேபோன்று பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், இங்கே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அங்கே பணிபுரிந்த பெண் இதேபோன்று நகைகளை திருடியதும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது சல்மான்கான் சகோதரி வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




