'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ் குமார். தங்கமீன்கள், குற்றம் கடிதல், தரமணி, பேரன்பு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்தவர். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.