புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ் குமார். தங்கமீன்கள், குற்றம் கடிதல், தரமணி, பேரன்பு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்தவர். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.