விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்களில் மகாபாரத பாதிப்பு உண்டு : கமல் புதிய தகவல் | கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம் | குருவாயூர் கோவிலில் இனிதே நடந்த மீரா நந்தன் திருமணம் | ஜீத்து ஜோசப் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மோகன்லால் | மாஸ்க் படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ருஹானி சர்மா | லாரன்ஸிற்கு வில்லனாக பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா | வரலட்சுமி திருமணம் : பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் தந்த சரத்குமார் | அருள்நிதி புதிய பட அப்டேட் | எல்.ஐ.சி படத்தை விட்டு விலகும் பிரபலம்...? | மலேசிய பிரதமரை சந்தித்த கமல் |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ் குமார். தங்கமீன்கள், குற்றம் கடிதல், தரமணி, பேரன்பு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்தவர். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.