‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு | பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ் குமார். தங்கமீன்கள், குற்றம் கடிதல், தரமணி, பேரன்பு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்தவர். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.