சமூக சீர்திருத்த கதையில் நடிக்க தயாராகும் காமெடி நடிகர் | ஒருவழியாக வெளியானது ‛விடாமுயற்சி' பர்ஸ்ட்லுக்: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் | திருமணம் செய்து கொள்ளாதீர்கள்: நவாசுதீன் சர்ச்சை கருத்து | 3 நாளில் 415 கோடி வசூலித்த ‛கல்கி 2898 ஏடி' | 2025ம் ஆண்டில் துவங்கும் கைதி-2 | மிஸ்டர். எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு! | டைனோசர்ஸ் பட இயக்குனர் உடன் இணையும் சிம்பு! | இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல் | இரண்டாவது நாளில் 298.5 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி | சுந்தர். சியின் ‛ஒன் டூ ஒன்' படத்தின் டிரைலர் வெளியானது! |
தென்னிந்திய சினிமாவின் ‛இசைக் குயில்' பாடகி பி.சுசீலா. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய பெண் குரல் இவருடையது. சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி உள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சினிமா மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற பி சுசீலா, எழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி மனம் உருக சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர், ‛நாராயண மந்திரம்' என்ற பக்தி பாடலை பாடியபடி மெல்ல நடந்து வந்தார். அவருடன் பலரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.