தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தென்னிந்திய சினிமாவின் ‛இசைக் குயில்' பாடகி பி.சுசீலா. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய பெண் குரல் இவருடையது. சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி உள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சினிமா மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற பி சுசீலா, எழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி மனம் உருக சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர், ‛நாராயண மந்திரம்' என்ற பக்தி பாடலை பாடியபடி மெல்ல நடந்து வந்தார். அவருடன் பலரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.