தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

தென்னிந்திய சினிமாவின் ‛இசைக் குயில்' பாடகி பி.சுசீலா. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய பெண் குரல் இவருடையது. சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி உள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சினிமா மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற பி சுசீலா, எழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி மனம் உருக சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர், ‛நாராயண மந்திரம்' என்ற பக்தி பாடலை பாடியபடி மெல்ல நடந்து வந்தார். அவருடன் பலரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.




