Advertisement

சிறப்புச்செய்திகள்

மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி | தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவுன்சரால் தள்ளிவிடப்பட்ட ரசிகரை வரவழைத்து சமாதானப்படுத்திய நாகார்ஜூனா

27 ஜூன், 2024 - 01:49 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-pacifies-the-fan-who-was-pushed-away-by-the-bouncer

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குபேரா படப்பிடிப்பிற்காக மும்பை விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் தனுஷூம் சென்றனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த நாகார்ஜூனாவை அவரது ரசிகர் ஒருவர் அருகில் நெருங்கி தொட முயற்சித்தார். நாகார்ஜூனாவை பின் தொடர்ந்து வந்த பவுன்சர் அவரை தள்ளிவிட்டார். பின்னால் வந்த தனுஷூம் இதை கண்டும் காணாதது போல நடந்து சென்றார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரது செயலும் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனைத் தொடர்ந்து நாகார்ஜூனா, இந்த நிகழ்வு பற்றி தனக்கு இப்போது தான் தெரிய வந்தது என்றும் அதற்காக தான் வருத்தப்படுகிறேன் என்றும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி ஓரளவு சர்ச்சையை சமாளித்தார்.

அதன்பிறகு மறுநாள் படப்பிடிப்பிற்காக சென்றபோது பவுன்சர்களை ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டு, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். நாகார்ஜூனாவின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் அதே மும்பை விமான நிலையத்திற்கு வந்த நாகார்ஜூனா, எப்படியோ தனது ஆட்கள் மூலமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுன்சர் மூலமாக தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை அழைத்து வரச் செய்து அவருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இன்றைய சந்திப்பிலும் அந்த ரசிகர் அதே நிற உடையை அணிந்திருந்தார் என்பது ஆச்சர்யம். அதுமட்டுமல்ல அன்று அவரை தள்ளிவிட்ட அந்த பவுன்சரும் அந்த ரசிகரின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நாகார்ஜூனா மீதான சர்ச்சையை முழுவதுமாக நிவர்த்தி செய்து விட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பாடகி பி.சுசீலாதிருப்பதியில் முடி காணிக்கை ... அவர் பாடல் எழுதியதால் மகாராஜா படத்தை பார்க்க மாட்டேன் : சின்மயி அவர் பாடல் எழுதியதால் மகாராஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in