பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் சின்மயி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீடூ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கியபோது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என குற்றம் சாட்டை பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதன்பிறகு அவர் தொடர்ந்து வைரமுத்து மீது குற்றச்சாட்டை சுமத்தி வந்ததால் தமிழ் சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமற்ற ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.
சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் சின்மயி. அதற்கு அவர் சொல்லும் காரணமும் வைரமுத்து தான்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் சின்மயி கூறும்போது, “பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசுகின்ற இந்த மகாராஜா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார் என இப்போது தான் தெரிய வந்தது. தங்களுக்கு பிடித்தமான ஒரு நபர் மீது குற்றம் சாட்டியதற்காகவே ஒருவரை வேலை பார்க்க விடாமல் தடை செய்யும் ஒரே துறை தமிழ் சினிமா மட்டும்தான். அதனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை. ஒருநாள், ஒரு கட்டத்தில் பழிவாங்கும் போக்கு அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பாலியல் வன்கொடுமையாளர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு பல மடங்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.