'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தாவிற்கு சென்னை, தலைமை செயலகத்தில் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
பின்னணி பாடகி பி.சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர், 13ல் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தன் இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளை, பலமுறை பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அதேப்போல் கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்., 5ல் பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல நுால்களை படைத்ததுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர்களது சேவையை பாராட்டி கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் பி.சுசீலா, மு.மேத்தாவுக்கு இன்று(அக்., 4) இந்த விருதினை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.