ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம் | 'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி | மீனா தொடருக்கு எண்ட் கார்டா? | பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் |
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தாவிற்கு சென்னை, தலைமை செயலகத்தில் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
பின்னணி பாடகி பி.சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர், 13ல் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தன் இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளை, பலமுறை பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அதேப்போல் கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்., 5ல் பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல நுால்களை படைத்ததுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர்களது சேவையை பாராட்டி கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் பி.சுசீலா, மு.மேத்தாவுக்கு இன்று(அக்., 4) இந்த விருதினை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.