ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம் | 'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி | மீனா தொடருக்கு எண்ட் கார்டா? | பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் |
பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படங்கள் எல்லாமே அவரது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அப்படி நாடோடி காட்டு, பட்டிணப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு என பல படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இந்த நிலையில் 2015ல் இவர்கள் கூட்டணியில் வெளியான என்னும் எப்பொழும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் 9 வருட இடைவெளிக்கு பிறகு இவர்கள் புதிய படத்திற்காக இணைகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார் என்கிற தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் மாய நதி, கடந்த வருடங்களில் தமிழில் வெளியான கட்டாகுஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஐஸ்வர்ய லட்சுமி. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்ய லட்சுமி இந்த படத்திலும் அதேபோன்று ஒரு பலமான கதாபாத்திரத்திற்காக நடிகர் மோகன்லாலுடன் முதல் முறையாக இணைந்துள்ளார், அதுமட்டுமல்ல ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ‛பூவே உனக்காக' நடிகை சங்கீதாவும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.