Advertisement

சிறப்புச்செய்திகள்

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு நவராத்திரி கொண்டாட்டத்தை துவங்கிய சமந்தா

04 அக், 2024 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Samantha-started-the-Navratri-celebrations-by-ignoring-the-criticism
Advertisement

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா என்பவர் இவர்களது விவாகரத்து பின்னணியில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரான கே.டி ராமாராவின் தலையீடு இருந்தது என்றும், இப்படி தெலுங்கு திரையுலகில் இவரது ஆதிக்கத்தால் பல நடிகைகள் சினிமாவை விட்டே ஓடி விட்டனர் என்றும் விமர்சித்து இருந்தார்.

தனக்கு பிடிக்காத எதிர்க்கட்சியை சேர்ந்தவரை விமர்சிப்பதற்காக தங்களது குடும்ப வாழ்க்கை பற்றி தவறான ஒரு கருத்தை கூறியதற்காக நாகார்ஜுனா, நாகசைதன்யா மற்றும் சமந்தா மூவருமே அமைச்சருக்கு எதிராக தங்களது பதிலடியை கொடுத்தனர். அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலகை சேர்ந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், ராஜமவுலி, நானி உள்ளிட்ட பலரும் பெண் அமைச்சரின் கருத்துக்கு தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர். தனக்கு எதிர்ப்பு வலுப்பதை கண்ட அமைச்சரும் இது குறித்து தான் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

இந்த விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் நடிகை சமந்தா. கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவியின் சிலை முன்பாக அமர்ந்து நவராத்திரி பூஜா வழிபாடுகளை துவங்கியுள்ளார் சமந்தா.

இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், “உங்களுடைய வார்த்தையை நான் அதற்காக எடுத்துக் கொள்கிறேன். நன்றி தேவி. அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லாலுக்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமிமோகன்லாலுக்கு ஜோடியான ஐஸ்வர்ய ... கத்தியை காட்டி மிரட்டி நடிகை சோனா வீட்டில் திருட முயற்சி கத்தியை காட்டி மிரட்டி நடிகை சோனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in