கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ‛மிருகம், குசேலன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் சில படங்களிலும், டிவி சீரியலிலும் நடிக்கிறார்.
சென்னை, மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறத்தில் புகுந்த திருடர்கள் இருவர் அங்கிருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சித்தனர். அப்போது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனா, திருடர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்போது திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சோனா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாக வைத்து திருடர்களை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.