கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

மலையாளத்தில் கடந்த 2017-ல் வெளியான ‛அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அதன்பிறகு ஜல்லிக்கட்டு, சுருளி என கிராமத்து பின்னணியில் எதார்த்த கதைகளை படமாக்கிய அவர், பின்னர் மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் மோகன்லாலை வைத்து மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக ஹிந்தியில் அடி எடுத்து வைக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனரான ஹன்ஷல் மேத்தா இந்த படத்தை தயாரிக்கிறார். கூடவே லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவலையும் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.