Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்'

15 அக், 2025 - 01:35 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-day-Rashomon-was-created-in-the-aftermath
Advertisement

தமிழ் சினிமாவின் முக்கியமான படமான வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய 'அந்த நாள்' படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் வெளிநாட்டு திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் கொண்டவர். அப்படி அவர் பார்த்து ரசித்த படங்களில் ஒன்று ஜப்பான் இயக்குனர் அகினோ குரோஷேவாவின் 'ராஷோமோன்'. வசனங்களால் கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் காட்சிகளால் கதை சொன்ன படம் அது.

ஒரு சம்பவம் நடக்கும் அந்த சம்பவத்தை சுற்றி உள்ளவர்கள் அதை தங்களுக்கு தெரிந்த வகையில் இப்படித்தான் நடந்தது என்பார்கள். அதையெல்லாம் கேட்டு உண்மையில் என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் 'ராஷோமோன்' புகழ்பெற்ற திரைக்கதை.

அதையே மையமாக கொண்டு தமிழுக்கு ஏற்றவாறு ஒரு ரேடியோ நாடகமாக எழுதி ஆல் இந்தியா ரேடியோவிடம் கொடுத்தார் வீணை எஸ்.பாலச்சந்தர். அவர்கள் இந்த கதை மக்களுக்கு புரியாது என்று புறக்கணித்தார்கள். அதே கதையை ஏவிஎம் செட்டியாரிடம் சொன்னபோது அது திரைப்படமானது.

ரேடியோ பொறியாளரான சிவாஜி கணேசன் முதல் காட்சியிலேயே கொல்லப்படுவார். அவரை யார் கொன்றது, ஏன் கொன்றார்கள் என்று சொல்வது படத்தின் திரைக்கதை. இந்த கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டு பின்னர் அது சரிவராமல் கடைசியாக சிவாஜி நடிக்க வைக்கப்பட்டார்.

படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சஸ்பென்சை சொல்லலாம். சிவாஜியை கொன்றது அவரது மனைவி பண்டரிபாய்தான். கடைசி காட்சி வரை எவருக்கும் பண்டரிபாய் மீது துளியும் சந்தேகம் வராத அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தனது கண்டுபிடிப்பு ஒன்றை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கத்தை பழிவாங்க நாட்டுக்கு துரோகம் செய்ய சிவாஜி முடிவு செய்வார். நாட்டுப்பற்று மிக்க அவரது மனைவி நாட்டுக்காக கணவனை கொல்வார்.

பல திரைப்பட கல்லூரிகளில், பல்கலைகழங்களில் 'அந்த நாள்' படத்தின் திரைக்கதை பாடமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவுகார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் ... பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in