மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தியேட்டர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களை நம்பியே முதலீடு செய்கின்றன. சில படங்களுக்கு வெளியாவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் முடிந்து விடுகிறது. ஆனால் பல படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்திக்கும்போது ஓடிடி வியாபாரத்தில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது மலையாள நடிகர் திலீப்பின் படங்கள் இதேபோன்ற சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




