சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழில் இந்த ஆண்டு யானையை கதைக்களமாக வைத்து படைதலைவன், கும்கி 2 ஆகிய படங்கள் வந்துள்ளன. படைதலைவன் படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்தார். பிரபுசாலமான் இயக்கிய கும்கி 2வில் லிங்குசாமி உறவினர் மதி நடித்தார். இரண்டு படங்களும் ஓடவில்லை. யானையை பலி கொடுப்பதை ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்பது இந்த படங்களின் கரு. அடுத்ததாக விமல் நடிக்கும் மகாசேனா படமும் யானை பற்றிய கதையாக உருவாகிறது. தினேஷ் கலைசெல்வன் இயக்கும் இந்த படத்தில் சேனா என்பது யானையின் பெயர். ஒரு யானை முக்கியமான கேரக்டரில் நடிக்கிறது. அதை எதிரிகளிடம் இருந்து எப்படி பாதுகாக்கிறார் ஹீரோ என்ற ரீதியில் கதை நகர்கிறது. கூடலுார், வயநாடு, கொல்லிமலை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. தெய்வீக இயற்கை சக்தியும், மனிதன் பேராசைக்கும் இடையேயான சண்டையே படக்கருவாம். டிசம்பர் 12ம் தேதி மகாசேனா படம் வருகிறது.




