பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழில் இந்த ஆண்டு யானையை கதைக்களமாக வைத்து படைதலைவன், கும்கி 2 ஆகிய படங்கள் வந்துள்ளன. படைதலைவன் படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்தார். பிரபுசாலமான் இயக்கிய கும்கி 2வில் லிங்குசாமி உறவினர் மதி நடித்தார். இரண்டு படங்களும் ஓடவில்லை. யானையை பலி கொடுப்பதை ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்பது இந்த படங்களின் கரு. அடுத்ததாக விமல் நடிக்கும் மகாசேனா படமும் யானை பற்றிய கதையாக உருவாகிறது. தினேஷ் கலைசெல்வன் இயக்கும் இந்த படத்தில் சேனா என்பது யானையின் பெயர். ஒரு யானை முக்கியமான கேரக்டரில் நடிக்கிறது. அதை எதிரிகளிடம் இருந்து எப்படி பாதுகாக்கிறார் ஹீரோ என்ற ரீதியில் கதை நகர்கிறது. கூடலுார், வயநாடு, கொல்லிமலை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. தெய்வீக இயற்கை சக்தியும், மனிதன் பேராசைக்கும் இடையேயான சண்டையே படக்கருவாம். டிசம்பர் 12ம் தேதி மகாசேனா படம் வருகிறது.