திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? |

சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார் மலையாள நடிகர் திலீப். இந்த வருடம் அவரது நடிப்பில் குடும்பப்பாங்கான திரைப்படமாக வெளியான 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' திரைப்படம் கூட டீசன்டான வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் அதிகம் எதிர்பார்த்து வருவது தற்போது நடித்துவரும் 'ப ப ப' படத்தை தான். அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இந்த படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் சூப்பர்ஹிட்டான 'லோகா' படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமான நடன இயக்குனர் சாண்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திர சகோதரர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்கள் போதாது என்று ஒரு முக்கியமான சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் மோகன்லால் திலீப்பின் நட்புக்காக இதில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார் என்பது மிக முக்கியமான விஷயம். நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்த இந்த படம் ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கமர்சியல் அம்சங்களுடனும் இந்த 'ப ப ப' படம் உருவாகியுள்ளதால் நிச்சயம் இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் நடிகர் திலீப்.