‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அங்கிருந்த யானை தந்தங்களை எடுத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஜேம்ஸ் மாத்யூ என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கேரள அரசு யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருக்க உரிமம் வழங்கியிருப்பதாகவும், அது மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து நடிகர் மோகன்லாலுக்கு யானை தந்தங்களை வைத்திருக்க உரிமம் வழங்கி இருந்தாலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அது ஏற்புடையது அல்ல.
அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதனை முறைப்படி அரசாணையாக வெளியிட வேண்டும். அதை செய்ய தவறியதால், மாநில அரசு வழங்கிய இந்த உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் இந்த வழக்கு மோகன்லாலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.