முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து அவர் துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அடுத்த படியாக தம்பியின் ஜனசேனா கட்சியில் சிரஞ்சீவி முக்கிய பொறுப்புக்கு வரப்போவதாக ஆந்திராவில் செய்தி பரவி வருகிறது.