22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து அவர் துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அடுத்த படியாக தம்பியின் ஜனசேனா கட்சியில் சிரஞ்சீவி முக்கிய பொறுப்புக்கு வரப்போவதாக ஆந்திராவில் செய்தி பரவி வருகிறது.