மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்தவர் வெங்கல் ராவ். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தனது கை கால்கள் செயலிழந்து விட்டதாகவும், வீட்டிலேயே முடங்கி விட்டதாகவும் கூறியவர், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி தெரியாமல் இருப்பதாக தனது நிலையை தெரிவித்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து நடிகர் சிம்பு அவருக்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் கே.பி.ஒய்.பாலாவும் வெங்கல் ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெங்கல் ராவ் அண்ணாவுக்கு என்னால் முடிந்த தொகையை மருத்துவ செலவுக்கு அளித்திருக்கிறேன். அதனால் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு அளிக்க வேண்டும். அவர் மீண்டும் திரும்பி வந்து சினிமாவில் நடித்து நம்மையெல்லாம் சிரிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கே.பி.ஒய். பாலா.
ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி
சிம்பு, கேபிஒய் பாலாவை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் வெங்கல் ராவ்விற்கு உதவி செய்துள்ளார். தன் பங்கிற்கு அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளார்.




