சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தியேட்டர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களை நம்பியே முதலீடு செய்கின்றன. சில படங்களுக்கு வெளியாவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் முடிந்து விடுகிறது. ஆனால் பல படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்திக்கும்போது ஓடிடி வியாபாரத்தில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது மலையாள நடிகர் திலீப்பின் படங்கள் இதேபோன்ற சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.