பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தியேட்டர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களை நம்பியே முதலீடு செய்கின்றன. சில படங்களுக்கு வெளியாவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் முடிந்து விடுகிறது. ஆனால் பல படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்திக்கும்போது ஓடிடி வியாபாரத்தில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது மலையாள நடிகர் திலீப்பின் படங்கள் இதேபோன்ற சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.