ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

நகைச்சுவை நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புதிய வருடப்பிறப்பில் இந்த படத்திற்கு 'பத்து நாள் ராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சதீஷ் சட்டையில் ஆங்காங்கே ரத்த கரைகள் படிந்திருக்க ஒரு கையில் காய்கறி பை மற்றொரு கையில் சாப்பாடு பை என கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய தோற்றத்தில் உள்ளார்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.




