பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நகைச்சுவை நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புதிய வருடப்பிறப்பில் இந்த படத்திற்கு 'பத்து நாள் ராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சதீஷ் சட்டையில் ஆங்காங்கே ரத்த கரைகள் படிந்திருக்க ஒரு கையில் காய்கறி பை மற்றொரு கையில் சாப்பாடு பை என கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய தோற்றத்தில் உள்ளார்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.




