பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
மலையாள திரை உலகில் மும்மூர்த்திகள் என்று சொல்லும் அளவிற்கு மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு இணையாக பல வருடங்கள் வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. அதன் பிறகு அரசியல் பக்கம் பார்வையை திருப்பிய அவர் தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி தற்போது மத்திய அமைச்சராகவும் மாறியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெண்பஞ்சு நிறத்தில் தாடியுடன், முறுக்கு மீசையுடன் பொதுவெளியில் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அரசியல்வாதியாக மாறிவிட்டதால் அவர் இந்த கெட்டப்பில் வருகிறார் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் தனது பணிகளை தொடர மறுபிரவேசம் செய்துள்ளார் சுரேஷ்கோபி. அடுத்ததாக இவர் நடிக்க இருக்கும் ஒத்தக்கொம்பன் படத்திற்காக தனது தாடியை க்ளீன் ஷேவ் செய்துவிட்டு மீண்டும் இளமையான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, “மாற்றம் ஒன்றே மாறாதது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒத்தக்கொம்பன் படம் 2020லேயே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா மற்றும் அவரது அரசியல் பணிகளால் அந்த படம் தள்ளிப் போய் இப்போது மீண்டும் துவங்க உள்ளது. பிஜூமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை மகேஷ் பாறையில் என்பவர் இயக்குகிறார்.