300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாளத்தில் வெகு சில படங்களே அதன் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மூன்றாம் பாகத்தை தொடுவது என்பது ரொம்பவே அரிது. அந்த வகையில் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு திரைப்படமும் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியாகிவிட்டது.
கடந்த 2015ல் முதல் பாகமும் 2017ல இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு இருவரும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “இதுவரை மலையாள சினிமாவில் டைம் ட்ராவல் பற்றிய கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த குறையை இந்த ஆடு 3 படம் போக்கும். இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த படம் உருவாகிறது” என்று ஒரு சஸ்பென்சை இப்போதே போட்டு உடைத்துள்ளார்.
டைம் ட்ராவல் கதை என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஆடு 3 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.