காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கிச்சா சுதீப் ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த பில்லா ரங்கா பாஷா திரைப்படத்தை இந்த வருடத்திற்குள் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற திட்டம் அவரிடம் இருந்தது. அதை சில பேட்டிகளிலும் கூறி இருந்தார். திடீரென எதிர்பாராத அறிவிப்பாக அவரது 47வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் சுதீப் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மேக்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விஜய் கார்த்திகேயா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள சுதீப், “இந்த வருடத்திற்குள் என்னுடைய படம் ஒன்று வெளியாக வேண்டும். ஒரே வீச்சில் இதன் படப்பிடிப்பை முடித்து டிசம்பரில் கிறிஸ்துமஸில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.. பில்லா ரங்கா பாஷா மிகப்பெரிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு வருவதால் அதை முடிக்க இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். அதற்குள் ஒரு படத்தை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் தான் இந்த படத்தை துவங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.