சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாளத்தில் வெகு சில படங்களே அதன் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மூன்றாம் பாகத்தை தொடுவது என்பது ரொம்பவே அரிது. அந்த வகையில் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு திரைப்படமும் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியாகிவிட்டது.
கடந்த 2015ல் முதல் பாகமும் 2017ல இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு இருவரும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “இதுவரை மலையாள சினிமாவில் டைம் ட்ராவல் பற்றிய கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த குறையை இந்த ஆடு 3 படம் போக்கும். இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த படம் உருவாகிறது” என்று ஒரு சஸ்பென்சை இப்போதே போட்டு உடைத்துள்ளார்.
டைம் ட்ராவல் கதை என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஆடு 3 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.




