காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிரமாண்டத்திற்கு தயாராகி விட்டார் நடிகர் ரன்பீர் கபூர். அவரது அடுத்த படமாக மிக பிரமாண்டமாக சரித்திர படமாக உருவாகிறது ராமாயணா. ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். சாய் பல்லவி இதில் சீதா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க, கேஜிஎப் புகழ் நடிகர் யஷ் இந்த படத்தில் வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இந்த படம் குறித்து கன்னட திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
அதேசமயம் இந்த முதல் பாகத்தில் யஷ் நடிக்கும் கதாபாத்திரம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் கதை அயோத்தியில் துவங்கி அதன்பிறகு வனவாசம் செல்லும் வரை ராமன் கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி நகர்வதால் படத்தின் கிளைமாக்ஸ் நெருங்கும்போது தான் ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் என்றும் இரண்டாம் பாகத்தில் தான் யஷ் கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவத்துடன் காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.