2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. வட நாட்டின் பல வீடுகளில் அமிதாப் பச்சனின் சிலைகள், உருவ பொம்மைகள் வைத்து குரு பூர்ணிமாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக கோல்கட்டாவில் ஒரு வீட்டில் அவரது சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.
தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பேசி பலருக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார். அதனால் அமிதாப்பச்சனை தங்களது மானசீக குருவாக ஏற்று மரியாதை மற்றும் வழிபாடு செய்துள்ளனர்.