முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | மனைவி உயிரை காப்பாற்ற கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை : முதல்வர் விஜய் நடவடிக்கை |

மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களாகவே 'மாளிகைப்புரம், மேப்படியான், மார்கோ' மற்றும் தமிழில் 'கருடன்' என தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி நல்ல வசூலையும் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அவதூறாக பேசியதாகவும் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உன்னி முகுந்தனும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டார் என விபின் குமார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதில் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக அவரது மேலாளர் விபின்குமார் கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, அது மட்டும் அல்ல உன்னி முகுந்தன் அவரை தாக்குவது போன்று சிசிடிவியில் எந்தவித காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.