தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களாகவே 'மாளிகைப்புரம், மேப்படியான், மார்கோ' மற்றும் தமிழில் 'கருடன்' என தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி நல்ல வசூலையும் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அவதூறாக பேசியதாகவும் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உன்னி முகுந்தனும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டார் என விபின் குமார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதில் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக அவரது மேலாளர் விபின்குமார் கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, அது மட்டும் அல்ல உன்னி முகுந்தன் அவரை தாக்குவது போன்று சிசிடிவியில் எந்தவித காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.