ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அதிக வசூலை கொடுக்கிறதோ அவர்கள்தான் சூப்பர் ஸ்டார். அந்த வரிசையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் ராஜேஷ் கண்ணா, தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.
ஆனால் இந்த சூப்பர் ஸ்டாருக்குள் சிக்காத சினிமா மலையாளம். காரணம் இங்கு சினிமா பெரும் கொண்டாட்டமாக இருக்கவில்லை. நாடகத்தின் இன்னொரு வடிவம் சினிமா என்று மலையாளிகள் எளிதாக எடுத்துக் கொண்டார்கள். என்றாலும் வெற்றி, வசூல் இவற்றை கணக்கிட்டு திக்குரிசி சுகுமாரன் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். 1990ல் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தி மலையாள சினிமா இதனை அறிவித்தது.
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த திக்குரிசி சுகுமாரன், கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமையாளராக இருந்தார்.
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். சுமார் 47 ஆண்டுகள் நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1993ம் ஆண்டில், மலையாள சினிமாவுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கேரள அரசின் மிக உயர்ந்த கவுரவமான ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார்.




