6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அதிக வசூலை கொடுக்கிறதோ அவர்கள்தான் சூப்பர் ஸ்டார். அந்த வரிசையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் ராஜேஷ் கண்ணா, தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.
ஆனால் இந்த சூப்பர் ஸ்டாருக்குள் சிக்காத சினிமா மலையாளம். காரணம் இங்கு சினிமா பெரும் கொண்டாட்டமாக இருக்கவில்லை. நாடகத்தின் இன்னொரு வடிவம் சினிமா என்று மலையாளிகள் எளிதாக எடுத்துக் கொண்டார்கள். என்றாலும் வெற்றி, வசூல் இவற்றை கணக்கிட்டு திக்குரிசி சுகுமாரன் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். 1990ல் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தி மலையாள சினிமா இதனை அறிவித்தது.
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த திக்குரிசி சுகுமாரன், கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமையாளராக இருந்தார்.
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். சுமார் 47 ஆண்டுகள் நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1993ம் ஆண்டில், மலையாள சினிமாவுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கேரள அரசின் மிக உயர்ந்த கவுரவமான ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார்.