ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' |
அரசியல் நையாண்டி மற்றும் நக்கல் காமெடி நடிப்பால் புகழ்பெற்றவர் எஸ்.எஸ்.சந்திரன். அதிபர் ஜோசப் தளியத் 'காதல் படுத்தும் பாடு' என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். காமெடி, குணசித்திர வேடங்களிலும், வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் “மாப்பிள்ளை”, “உழைப்பாளி” படங்களில் நடித்துள்ளார். “பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் பாத்திரம் பேசப்பட்டது.
பூக்காரி, சிவப்பு மல்லி, அவன், சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, தைப்பூசம்,, உழவன் மகன், என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ஆத்தா உன் கோயிலிலே , சின்னப்பதாஸ், வண்டிச்சோலை சின்னராசு, கதாநாயகன் , காக்கைச் சிறகினிலே, தங்கமான ராசா, நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள், 'மனைவி ஒரு மந்திரி, வாங்க பார்டனர் வாங்க உள்ளிட்ட 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இயக்குனர் ராம நாராயணனின் ஆஸ்தான நடிகராக இருந்தார். அவரது எல்லா படங்களிலும் எஸ்.எஸ்.சந்திரன் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி சிவகங்கை ஸ்கிரீன் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம நாராயணன் இயக்கத்தில் எங்கள் குரல், புருஷன் எனக்கு அரசன் படங்களை தயாரித்தார். 'பொம்பள சிரிச்சா போச்சு' என்ற படத்தை எஸ்.எஸ்.சந்திரன் இயக்கியதாகவும் கூறப்படுவதுண்டு.